Tuesday, 18 January 2022

புருவத்தை எடுக்காதீங்க - பகுதி 5

ஹலோ எங்க இருக்கீங்க? என்று ஈஸ்வர் அழைத்தான்.
சரி உள்ள வாங்க என்றான்
யாரு அது?என்ன வெச்சு என்ன பிளான் போடுறீங்க? என்று சற்றே பயந்த குரலில் கேட்டாள் குமுதா.
பயப்படாத குமுதா 2 நிமிஷம் என்றான் ஈஸ்வர்.
உன் தலையெல்லாம் ஈரம் சொட்டுது இந்த துண்டை துடைச்சிக்கோ என்று சொல்லி ஒரு டவலை கொடுத்தான்.
நீங்க இப்படி பேசுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன் என்று சொல்ல வெடுக்கென்று டவலை பரித்துக்கொண்டாள் குமுதா.
அவசரபடாதே நான் சொல்ல போறதை முழுசா கேளு. நான் தப்பா எதுவுமே பேசலை என் மேல உனக்கு எவ்வளவு அக்கறை ஆசை ன்னு தெரிஞ்சிகிட்ட அப்புறம் தான் இதை சொன்னேன்.
பொய் என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?நீங்க கடை முதலாளி நான் வேலைக்காரி அவ்ளோதான நமக்குள்ள? அப்புறம் நான் உங்க மேல ஆசைப்படுறேன்னு எப்படி சொன்னீங்க?என்று குமுதா அடுக்கிக்கொண்டே போக..
நான் தான் சொன்னேன்.. என்று சட்டென்று பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.குமுதா திரும்பி பார்க்கவே அங்கு சுனிதா நின்று கொண்டிருந்தாள்.
சுனிதாவை கண்டதும் குமுதாவிற்கு கோபம் வந்தது.
ஏண்டி உன்னால தான் இவ்வளவும் என்று அவளை கோபமாக அடிக்க செல்லவே.
குமுதா நில்லு! என்று இடியென்ற குரலில் அடக்கினான் ஈஸ்வர்.
உங்களுக்கு இவளை தெரியுமா? முன்னாலேயே பார்த்திருக்கீங்களா? பின்ன என்கிட்ட எதுக்கு இப்படி பொய் சொல்றீங்க? என்றாள்.
குமுதா!முதல்லே உட்கார் கொஞ்சம் அமைதியாகு அப்புறம் தான் பேச முடியும் என்று ஈஸ்வர் சொல்லவே.
எப்படிங்க முடியும்? என்று கோபம் தணியாமல் கேட்டாள் குமுதா.
என்னை நம்புரியா இல்லையா ?என்று கோபமாக கேட்கவே குமுதா சற்று அமைதியானாள்.
குமுதா நடந்த எல்லாத்தையும் விவரமா சொல்றேன் கேளு.
==================================
குமுதா அவள் மொட்டையடிக்க  ஏற்பாடு செய்யப்பட்ட பெண் வந்துவிடுவாள் என்று சொன்னாலும் அவனுக்கு நம்பிக்கையை வரவில்லை. தானே ஏதாவது ஒரு பெண்ணை ஏற்பாடு செய்யலாம் என்றாலும் அதற்கும் வேறு மூன்றாவது ஆள் தேவை.ஆனால் அதற்கு நேரமோ இல்லை. மேலும் அவன் விருப்பத்தை பயன்படுத்தி  அந்நபர் ஏதேனும் வில்லங்கம் செய்யவும் வாய்ப்புக்கள் அதிகம் ஆகவே சற்று பொறுமையுடன் காத்திருக்க எண்ணினான்.
அடுத்த முறையும் குமுதா பதட்டமாக பேசவே அவனுக்கு சுத்தமாக நம்பிக்கை போயிற்று. ஆகவே அவளை நேரில் சந்தித்து விடுவதென்று எண்ணினான். ஆனால் குமுதாவோ சுனிதா சம்மதம் சொல்லிவிட்டாள் என்று கூறியவுடன் நிம்மதியாக இருந்தான். 
மேற்கொண்டு சுனிதாவிற்கு முடி எப்படி இருக்கும் எத்தனை நீளம் இருக்கும் என்று சில படங்களை எடுத்து தருமாறு கேட்டான் ஆனால் குமுதா தரவில்லை. ஈஸ்வர் மிகவும் நச்சரித்த பின்னரே தந்தாள். குமுதாவை சந்தித்த போது சுனிதவின் முடியை பற்றி புகழ்ந்தனான். ஆனால் குமுதாவோ அதனை ரசிக்க வில்லை மேலும் சுனிதாவிற்கு எப்படி மொட்டையடிக்க போகிறான் என்று  குமுதாவிடம் சொல்ல முற்பட்டபோதெல்லாம் குமுதாவும் முகம் வாட்டமாக இருந்தது.அவனது ஆர்வத்தை அவள் ரசிக்ககிவில்லை.மேலும் குமுதா தானும் அவனுடன் சுனிதவிற்கு மொட்டையடிக்கும் போது கண்டிப்பாக இருக்கப்போவதாக வலியுறுத்திக்கொண்டே இருந்தாள்.  ஈஸ்வருக்கு குமுதாவின் செயல்கள் அனைத்தும் சற்று ஆச்சரியமாக இருந்தது. சரி இதுபெண்களுக்கே உரிய பொறாமை குணமாக இருக்கும் என்று எண்ணி விட்டுவிட்டான். 
சுனிதாவிற்கு என்று மொட்டையடிக்க போகிறோம் என்று சொன்னாலும் அவளை ஒருமுறையேனும் சந்தித்து பேசி தன்னுடன் சகஜமாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் குமுதா  அவளை காணவோ தொடர்பு கொள்ளவோ அனுமதிக்ககிவில்லை..அவளுடன் பேச முடியவில்லை.அவளிடம் பேசினால் நிலமை சகஜமாகலாம் ஆகையால் அவளுடைய மொபைல் போன் எண்ணை குமுதாவிடம் வாங்கலாம் என்று எண்ணினான் ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை குமுதா தரமாட்டாள் என்று தெரிந்துகொண்டான். 
நிலைமை இப்படி இருக்கவே அன்று இரவு ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.
அழைத்தவள் சுனிதாத்தான் அவனுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல மகிழ்ந்தான். அவளே பேச ஆரம்பித்தாள்.
சுனிதாவும் பரஸ்பர பேச்சுக்களுக்கு பின் அவளை பற்றியும் அவள் அலுவலகத்தில் நடந்த சம்பவம் பற்றியும் கூறினாள். இறுதியாக தன் அலுவலகத்தில் பொருட்டும் தன் குடும்ப பண தேவைக்கும் தான் அவன் சொன்னதுபோல மொட்டையடிக்க சம்மதித்தாகவும் கூறினாள். ஆனால் தனக்கு இதில் துளியும் உடன்படில்லை என்றும் ஆனால் தன் தோழி குமுதாவிற்கு வாக்கு கொடுத்ததால் அவளுக்கு கெட்டபெயர் ஏற்படக்கூடாது மேலும் அவனிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வதென்று யோசித்துக்கொண்டிருக்கும் போது ஈஸ்வரின் எண் கிடைத்தது என்று சொன்னாள்.
ஈஸ்வருக்கு கடும் ஏமாற்றம் வந்தாலும் அவளது நிலைமையை புரிந்து கொண்டான்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டு அவன் குமுதாவிற்கு இந்த விஷயம் தெரியுமா? என்று கேட்டான். சுனிதா அவளிடம் சொல்லவில்லை நீங்கள் உங்கள் முடிவை சொன்னால் மேற்கொண்டு பேசலாம் என்றாள்.
தான் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வாய் ?எந்தது கேட்டான்.
சுனிதவோ தாங்கள் விரும்பும் போது சம்மதிக்கத்தான் வேண்டும் எனக்கு பணகஷ்டம் தீரும் குமுதவிற்கும் நல்ல பெயர் கிடைக்கும் 

சரி உனக்கு ஏன் மொட்டையடிக்க சம்மதமில்லை என்று கேட்டான். சுனிதா முக்கியமான இரண்டு விஷயம் இருக்கிறது என்றாள். என் காதலன் என்னை கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டான். ஆனால் நான் வேலைக்கு செல்லவேண்டும் முடியுடன் போனால் என்னை ஏற்க மாட்டாட்கள். ஆகவே நான் எப்படியும் மொட்டையடித்துக்கொள்ளதான் வேண்டும். 
சரி அப்போ அடித்துக்கொள்ளவேண்டியதுதானே என்றான் ஈஸ்வர்.
ஆனால் அவன் வீட்டில் கல்யாணம் ஆன பின்னர் திருவேற்காடு கோயிலுக்கு போய் தம்பதி யாகத்தான் முதல் மொட்டை அடித்து கொண்டு முறையாக பொங்கல் வைக்க வேண்டுமாம் ஆகவே நான் இப்போது மொட்டையடிக்க முடியாது. ஆனால் இப்போது பணமும் கல்யாணமும் முக்கியமான வேலைக்கு போகவும் வேண்டும் என்று சொல்லி விட்டு அதனால் எனக்கு வேறு வழியில்லை நீங்கள் சொன்னால் மொட்டையடடித்துக்கொள்ள
ஒத்துக்கொள்ளதான் வேண்டும். இப்போது முடிவு உங்கள் கையில் தான் உள்ளது என்று சொல்லி நிறுத்தினாள்.

எனக்கு ரொம்ப ஏமாற்றம்தான் இருக்கு ஆனால் ஒருத்தரை வற்புறுத்தியோ இஷ்டம் இல்லாமல் என் ஆசையை தீர்க்க கூடாது. அதனால உன்னை கட்டாய படுத்த விரும்பவில்லை.
உங்க கிட்ட இன்னொரு முக்கியமான விஷயத்தை இப்போ சொல்ல போறேன்
 என்னது அது?என்றான்.
 நீங்க சொன்னாநம்புவீங்களான்னு தெரியவில்லை ஆனால் என்னை விட குமுதாதான் இதில் அதிக விருப்பத்தோடு இருக்கிறாள்.
என்னது அவள் மொட்டையடித்துக்கொள்ள விரும்புகிறாளா?
ஆமாம் உங்க கிட்ட அவள் இஷ்டத்திற்கு மொட்டையடித்துக்கொள்ள விரும்புறா.
நான் எப்படி நம்புறது? 
இல்லைங்க நான் உண்மையை தான் சொல்றேன்.
நீ மொட்டையடிசிக்க வேண்டாம்னு சொல்லிட்ட அப்புறம் அநாவசியமா குமுதாவை எதுக்கு கோத்து விடுற என்றான் ஈஸ்வர்
ஐயோ நான் பொய் சொல்லலை இருங்க என்று ஒரு வாய்ஸ் கிளிப்பிங்கை அனுப்பினாள்.
குமுதா தூக்கத்தில் உளருவது போல குரலில் இருந்தது.
ஈஸ்வர்.. என்னை கேட்டிருந்தா நானே மொட்டையடிக்க சம்மதம்னு சொல்லி வந்திருப்பேனே. என்னை விட எத்தனை பெரிய ஆளு நீங்க என்னை பிடிக்கலியா நான் நல்லா இல்லையா? உங்களுக்கு எவ்வளவு செய்யறேன் சுனியையே கேக்குறீங்களே தவிர என்னை தெரியலையா? என்றாள்.
அதை கேட்டபின் ஈஸ்வரின் மனதுஉண்மையை அறிந்து கொண்டு அடித்துக்கொண்டது.
அவள் உங்க மேல் ஆசை வெச்சிருக்கா அதனால தான் அவளுக்கு தெரியாம இதை ரெக்கார்ட் பண்ணினேன். அவளை கைவிட்டுடாதீங்க என்றாள்.
====================
நான் மனசார அவளரபஎன் குமுதா உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. நீ எனக்காக இத்தனையும் யோசிக்கிறன்னா உன்னைவிட சரியான ஆளு எனக்கு கிடைக்காது. சுனிதா சாட்சியா சொல்றேன் நீ சம்மதிச்சால் நானே உன்னை கல்யாணம் செய்துக்கிறேன். நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு வளர்ந்தவன்னு கூட இருந்து பார்த்தவள் நீ. நான் பொய் சொல்ல மாட்டேன் வாக்கு கொடுத்தா மீற மாட்டேன். என்ன சொல்ற? என்றான ஈஸ்வர். உனக்கு விருப்பம் ன்னா சொல்லு. சம்மதம்னு நினைச்சு சந்தோஷமா வாழலாம் என்று சொல்லி அவள் முன்னே இருந்த மேசையில் புத்தம் புதிய சவர கத்தியை ஒன்றை வைத்தான்.
இதோ பாரு குமுதா இது நான் உனக்காக வாங்கின புது சவர கத்தி நீ என்னை விரும்பினால் இதை கையிலே எடு.
விருப்பம் இல்லேன்னா நீங்க ரெண்டு பேரும் கிளம்பலாம்.
அதுக்காக ஒரேயடியாக போயிடாதே. நீ சகஜமாக இருக்கலாம் வேலைக்கும் வரலாம். நாம நண்பர்களாக இருக்கலாம்.
நீயே முடிவெடு என்று சொல்லி நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
இத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த குமுதா விசும்பி அழலானாள். அவளை சுனிதா தேற்றினாள். ஈஸ்வர் அமைதியாக இருந்தான்.
திடீரென்று அங்கு ஒரு அமைதி நிலவியது.
குமுதா சற்று நேரம் கழித்து 
சரிங்க ஈஸ்வர்.நீங்க ஜெயிச்சிடீங்க நான் ஒத்துக்குறேன் என்று சொல்லி அந்த புது சவர கத்தியை கையில் எடுத்துக்கொண்டாள்.
குமுதா!! என்று சந்தோஷமாக அழைத்தான் ஈஸ்வர்.
ஆனால் எனக்காக சில விஷயங்களை செய்யணும் என்றாள்.
சொல்லு குமுதா என்ன வேணும்? என்றான்.
 நீங்க எனக்கு இனிக்கே கூட மொட்டையடிக்கலாம் என்றாள்.
 அட!சரி சரி என்றான்.
ஆனால் நீங்க சொன்ன மாதிரி மொட்டை கிடையாது. அது நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்தான் என்றாள்.
ஹ்ம்ம் சரி என்று சற்று ஏமாற்றத்துடன் தலையாட்டினான்.
சுனிதாவுக்கு நான் உதவி செய்ய காரணம் அவங்க வீட்ல ரொம்ப கஷ்டம் அதனால நம்ம கல்யாணத்தொட அவங்க கல்யாணமும் சேர்ந்து செய்யணும்.அவளுக்கு கொஞ்சம் பணஉதவியும் செய்யணும்
ஓஹோ அவ்ளோதானா இன்னும் இருக்கா
இன்னும்.
இன்னும் ஒண்ணே ஒண்ணு..
சொல்லு கேட்டுக்குறேன் மேடம் என்றான் ஈஸ்வர் சிரித்துக்கொண்டே
கிண்டல் வேண்டாம் மாமா! என்றாள் குமுதா.
மாமாவா என்ன ஒரு மாற்றம் என்று சிரித்தான்.
அய்ய புருஷனை எப்பிடி கூப்பிடுறதாம் என்றாள் சுனிதா.
சரி சரி சொல்லுங்க மேடம் என்றான் மீண்டும்
மாமா!!!என்றாள் குமுதா
சரி சரி விளையாடலை சொல்லு என்றான்.
எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் எவ்ளோ வேணும்னாலும் மொட்டையடிங்க உடம்பு முழுக்க ஷேவ் பண்ணுங்க ஆனா என்னோட புருவத்தை மட்டும் எடுக்காதீங்க. ப்ளீஸ் என்று கேட்டால் குமுதா
ஹான்! இதென்ன புது வகையாக கண்டிஷனாக இருக்கு??ஏன் உன் புருவத்தை எடுக்க கூடாது ?என்றான்.
மாமா எனக்கு இந்த புருவம் ரொம்ப பிடிக்கும் அதை இழக்க விரும்பலை எனக்காக இதை மட்டும் விட்ருங்க என்றாள்.
அவ்வளவுதானே எனக்காக இவ்வளவும் நீ செய்யிற இதை கூட நான் செய்ய மாட்டேனா என்று சொல்லிக்கொண்டே
டக்கென்று அவளை உடலோடு இறுக்கி அணைத்துக்கொண்டு அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் இதழ்களில் முத்தத்தை பதித்தான் ஈஸ்வர்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சுனிதா ம்கும் என்று கனைத்தாள்.
அதை கேட்ட அதிர்ச்சியில் துள்ளி பின்னனுக்கு சென்றனர் இருவரும்.ஐயோ ஐயோ அடிப்பாவி ஏற்கனவே பேசி வெச்சிட்டு சுளுவா என் பேரில் பழியை போட்டுக்கிடீங்க ல்ல. என்றால்
குமுதா விரைவாக அவளை கட்டி பிடித்துக்கொண்டு அழுதாள். சுனி இல்லடி நீ இல்லேன்னா இவ்வளவும் எனக்கு தெரிஞ்சிருக்காது பிடிச்சிருந்தாலும் எனக்கு சொல்ல தைரியம் இல்லை.நிஜமாகவே நான் உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்.
அடி பயித்தியம்!நீ எனக்காக எவள்ளவு உதவி பண்ணுற அதுக்கு நானில்லை உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் என்றாள்.
ஆமாம் சுனிதா உனக்கு நிறைய நன்றி கடன் பட்டிருக்கேன். உனக்கு ஒரு பரிசு இருக்கு சொல்றேன் என்றான் ஈஸ்வர்.
சுனிதாவிற்கு பெரும் பிரச்சனை முடிந்ததை எண்ணி மகிழ்ந்தாள்.
தனக்கும் தான் உயிர்தோழிக்கும் வாழ்க்கையின் பெரும் திருப்பம் ஏற்பட்டதை நினைத்து சந்தோஷம் அடைந்தாள்.
சரி சரி நான் வந்த வேலை நல்லபடியாக முடிஞ்சது. அப்போ நான் கிளம்புறேன் நான் வேற எதுக்கு உங்க சிவபூஜையில என்றாள்.
அடியே இருடீ நீவேற நாங்க தனியா இருந்தா நிலைமை மோசமகிடும். நீயும் இரு சேர்ந்து போகலாம் என்றான்.
அன்று முழுவதும். பேச்சுவர்த்தையாக நாள் கழிந்தது. ஈஸ்வர் தன் பெற்றோரிடமும் குமுதா அவள் பெற்றோரிடமும் பரஸ்பரம் பேசிக்கொண்டனர். தங்கள் திருமண முடிவை தெரிவித்தனர். 
அடுத்து சுனிதாவின் அலுவலக மேலாளர் தன்னுடைய வாடிக்கையாளர் என்று தெரிந்து கொண்டான். அவனுக்கு வேலை சற்று சுலபமானது. சுனிதாவை பற்றி சொல்லி அவளை வேலைக்கு சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டினான். அவரும் சம்மதித்தார். ஆனால் அவள் ஏதாவது ஒரு தண்டனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் குறிப்பாக இருந்தார். சுனிதா வெகு விரைவில் திருமணம் செய்ய போகிறாள் என்றும் அவள் மொட்டையடித்துக்கொண்டு வேலைக்கு சேருவாள் என்று சொல்லி சம்மதமும் வங்கிக்கொண்டான்.மேலும் அவளுக்கு நிறுத்த பட்ட சம்பளத்தை தந்தால் மிக்க உதவியாக இருக்கும் என்று வேண்டினான். அவன் நட்புக்காக செய்வதாக சம்மதித்தார். இதை சுனிதா அவள் காதலன் கார்த்திக்கும் சொன்னாள். அவன் மகிழ்ந்து கல்யாணம் முடிந்தவுடன் வேண்டுதலை ஜோடியாக நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று சொன்னான். 
குமுதா அவள் பெற்றோரிடம் தனக்கு திருமணம் நிச்சயம் ஆனால் திருமணத்திற்கு முன்பாக மொட்டையாடுத்துக்கொள்ளபோவதாக கூறினாள் அதை கேட்டு அவள் பெற்றோர் இதற்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்கவில்லையென்றால் பிரச்சனை வரும் என்று சொன்னார்கள். ஈஸ்வரே மறுபடியும் அவர்களிடம் பேசி தனக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை என்று சொல்லி திருமணம் சீக்கிரமாக நடக்க வேண்டும் என்பதால், தானே முன்னே இருந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகிறேன் என்று சொல்லி இரு வீட்டாரின் சம்மதமும் பெற்று விட்டான்.
எல்லாம் முடிந்ததும் நிம்மதியாக அன்று மூவரும் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.
மறுநாளும் விடுமுறை என்பதால் குமுதாவை தனுக்கு பிடித்த நீல வண்ண புடவையில் தலை நிறைய பூவுடன் 'வேண்டுதலை' நிறைவேற்ற அவள் வைத்துக்கொண்டிருக்கும் புது சவர கத்தியுடன் வருமாறு சொல்லி அனுப்பினான்.
குமுதா கண்டிப்பாக வருவேன் ஆனால் தனியா மட்டும் வரமாட்டேன். சுனிதவோட தான் வருவேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள்.

💇💇🙆🙆💆💆

7 comments:

  1. நண்பா உண்மையிலேயே அற்புதமாக இருந்தது உங்களுடைய இந்த பதிவு நான் இந்த பதிவில் உள்ள ஒவ்வொரு வரிகளையும் ரசித்து ரசித்து படித்தேன் நண்பா இதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் உண்மையிலேயே அற்புதமாக இருந்தது இதனுடைய கடைசி பகுதியை காண்பதற்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. Kuppu saloon part 4,5 pothungha

    ReplyDelete
  3. Kuppu saloon part 4,5 pothungha

    ReplyDelete
  4. நண்பா உங்களுடைய அடுத்த பகுதி எப்பொழுது வரும்

    ReplyDelete

கல்யாணி மொட்டை பகுதி 4

மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு சரிக்கா அப...