Tuesday, 22 February 2022

திருப்பதியில் எனக்கு ஒரு புது அனுபவம்

நண்பர்களே என் கதைக்கு நீங்கள் கொடுக்கும் ஆதர்வ்விற்க்கு மிக்க நன்றி

இன்றைக்கு சரியாக ஒரு வருடதிற்கு முன்னர் 21,22  பிப்ரவரி 2021 அன்று திருப்பதியில் ஏற்பட்ட ஒரு உண்மை சம்பவத்தை அனுபவத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன்.
சிறு பெயர் மாற்றத்துடன் அந்த கதை.
கோரோனா காலத்தில் அனைவரும் பாதிக்கப்பட்டத்திற்கு திருப்பதி ஏழுமலையான் கூட தப்பவில்லை நம் பாவப்பட்ட முகங்களை பார்க்க விரும்பாவில்லையோ என்னமோ முழு லாக் டவுனில் தன்னை ஆழ்த்திக்கொண்டார் பெருமாள். அதனால் என் 3 வயது மகளுக்கு தலைக்கு மேல் கடன் ஏறிக்கொண்டே போனது.என் மகளின் முடியைத்தான் சொன்னேன். அவள் முடி மொட்டையடிக்க படாமல் மிகவும் அவஸ்தை பட்டோம். எப்பொதுடா சற்றேனும் சந்து கிடைக்கும் பெருமாளை தரிசித்து இந்த பாரத்தை கொடுத்துவிடலாம் என்று வழிமேல் விழிவைத்த காத்திருந்தோம். 2021 ல் ஒரு வழியாக ஆந்திர அரசாங்கம் கொஞ்சம் தளர்வுகளை கொண்டு வந்தவுடன் உடனடியாக என் நண்பர்கள் உதவியுடன் திருப்பதி தரிசனத்திற்கு புக் செய
தரிசனதிர்க்கும் தங்கும் அரைக்கும் cottage பதிவுசெயத்துவிட்டோம்.
சோதனையாக என் டீமில் வேலைப்பார்த்தவருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளது போல சந்தேகம் வரவே அவருக்கு பதில் நான் மாட்டினேன். அய்யோ பெருமாளே இதென்ன சோதனை என்று எனண்ணும்போது அது பஞ்சினை போல பறந்தது. ஒரு வழியாக லீவு கிடைத்தது என்று மகிழ்ச்சி யுடன் எல்லா பயண ஏற்பாடுகளையும் செய்யும்போது சோதனையாக காலையும வேலை. 
அனைத்தையும் பெருமாள் பார்த்துக்கொண்டதுபோல மேஜிக் நடந்து வேலையை முடித்துவிட்டு 20 ம் தேதி அன்று கிளம்பினோம். வழியில் எதுவும் கிடையாது அங்கேயும் சரியான சாப்பாடு இருக்காது அன்னதான சேவையிலலும் அன்றைய தேதியில் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டும் என்று தெரிந்தால் சாப்பாட்டினை கட்டிக்கொண்டு நாங்கள் காரில் புறப்பட்டு விட்டோம்.
வழியில். எங்களுக்கு முதலில் சோதனை. ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் அனைத்து முக்கிய சாலைகளை இடங்களும் வழியை தடை செய்து விட்டனர். வேறு வழியில் திருப்பி விடப்பட்டோம். கீழ் திருப்பதி சென்று விட்டு மேலே எறிக்கொள்ளலாம் என்ற திட்டம் கூட்டதாலும் தேர்தல் களேபாரத்தாலும் தவிடுபொடியானது. அன்று கூட்டம் மிகவும் இருந்ததால் பத்மாவதி தாயார் தரிசனம் செய்யும் திட்டத்தை மாற்றி நாங்கள் நேராக மலை ஏறிவுடலாம் என்று முடிவெடுத்தோம். 2 மணிக்குத்தான் காட்டேஜ் புக்கிங் கிடைக்கும் என்று சொல்லி தைரியமாக சென்றோம் அப்போதது மணி 12 45.

அலிபிரி சென்ற எங்களுக்கு அதிர்ச்சி. எங்கள் முன்னர் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனை சாவடியில் நிற்கின்றன.
அரசாங்க முடிவுப்படி அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து தரிசன சீட்டும் கோரோனா தடுப்பூசி போட்டவரை மட்டுமே அனுமதி என்று ஒவ்வொருவரையும் சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.
எங்களுக்கு 2:30 க்கு சுதர்சன காட்டேஜ் வளாகத்தில் வந்துவிட வேண்டும் என்று போட்டிருந்தனர். எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு வழியாக மறுபடியும் பெருமாளை வேண்ட வழி திறந்து எங்களை சரியாக 2 25 க்கு அங்கு நிறுத்தினார் ஏழுமலையான்!
ஒருவழியாக நாங்கள் வந்து சேர்ந்ததும்,தான் பெருமாள் எத்தனை சகாயம் செய்திருக்கிறார் என்று தெரிந்தது.
அங்கே கூட்டம் அலைமோதியது.  தேர்தல் நடப்பதால் அனைவரும் சிபாரிசு கடித்துடன் தரிசனமும் காட்டேஜ் ரூம்களுக்கு மல்லு கட்டிக்கொண்டு இருந்தனர். எங்களுக்கு ரூம் புக்கிங் ஆனதால் சுலபமாக கிடைத்ததை எண்ணி நன்றி சொல்லிக்கொண்டோம். சாப்பிட அங்கு அந்த நேரத்திற்கு சரியான ஓட்டல் இல்லாததால் கொஞ்சம் சிரமப்பட்டோம். ஆனால் நாங்கள் எடுத்துவந்த சாப்பாட்டினை வைத்து சமாளித்துவிட்டோம்.
அருமையாக அன்று இரவு வெளி பிரகாரத்தில் தரிசனமும் செய்துவிட்டோம். சுதர்சன காம்பிலக்சில் கீழ் தளத்தில் மொட்டையடிக்க வசதி உள்ளது என்று தெரிந்து கொண்டோம். மதியம் 1 மணிக்கு தரிசனம் என்றாலும் சீக்கிரமாக போனால் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது என்று முடிவுசெய்து. 
காலை 7 மணிக்குள்ளாகவே குழந்தைக்கு முடி இறக்கி விட்டு சாப்பிட்டபின் போகலாம் என்று எண்ணி கொண்டு கல்யாண கட்டாவிற்கு சீக்கிரமாகவே செல்ல முடிவெடுத்தோம்.
என் அப்பா தான் தலைமையேற்று மொட்டை, தரிசனம் பற்றிய திட்டம் போட்டு நடத்திக்கொண்டிருந்தார்.
நான் குழந்தைக்கு  டோக்கன் வாங்கிட்டு அங்கேயே இருக்கேன். பார்பரை பார்த்து பேசிட்டு வரேன்.குழந்தையை கூட்டிகிட்டு பின்னாலேயே வாங்க  என்று அப்பா சொன்னார்
அப்போது நான் இல்லப்பா நானும் மொட்ட போட போறேன் எனக்கும் சேர்த்து வாங்குங்க என்று சொன்னேன்.
என் அப்பா திடீர் என்று சொன்னால் என்ன பண்றது ?வேண்டுதல் இல்லாமல் அப்படியெல்லாம் இஷ்ட்டதுக்கு மொட்டை அடிக்க கூடாது என்று சொன்னார். இல்லப்பா வேண்டுதல் இருக்கு.
 எப்போ வேண்டினது?முன்ன 2 வது வருஷம் வெள்ளத்தில் மாட்டினேன் இல்லையா? அப்போ நான் வேண்டினேன் என்று சொன்னேன்
அப்போவே பண்ண வேண்டியது தானே என்றார்
எனக்கு சொல்ல தைரியம் இல்லை. இனிமேலும் விட்டாக மறந்தே போயிடும் அதனால இப்போவே முடிச்சிடலாம் என்றேன்.
என்னவோ பண்ணு இப்போவாச்சும் ஞாபகம் வந்ததே என்றார். சரி சரி சீக்கிரம் போங்க நேரமாக நமக்குத்தான் தொந்தரவு என்றார். உடனே குழந்தைக்கு மொட்டை போட செல்ல தயார் ஆகும்போது என் மனைவி திடீரென்று நான் கூட முடி கொடுக்க வேண்டும் என்றாள்.
எங்கள் மூவருக்கும் அதிரிச்சி என்ன சொல்ற நீ முடிகொடுக்க போறேன்னு இப்போ சொல்ற.என்ன பண்றதா இருக்க மொட்டையா என்றேன்.
இல்ல இல்ல டெலிவரி நல்லபடியா நடந்தா பூமுடி கொடுக்கறதா வேண்டினேன் அதான் இப்போ கொடுக்கலாம் ன்னு முடிவு பண்ணியிருக்கேன் என்றாள்.
இப்படி புருஷனும் பொண்டாட்டியும் திடீர்னு முடிவு பண்ணா எப்படி ?அதுவும் பிளான் பண்ணி நல்ல நேரத்துக்கு சொல்றீங்க. நம்ம வீட்ல கல்யாணம் ஆன பொண்ணுங்க முடி கொடுக்கிறதில்லை. நீ வேண்டுதல் ன்னு சொல்லாமல் இப்பிடி கடைசி நேரத்தில் சொல்றது நல்லவா இருக்கு என்று கண்டித்தார் அப்பாவும் அம்மாவும்.
இல்லத்தை நான் வேண்டி இருந்தேன் ஆனால் இவரை போலவே சொல்ல தைரியம் வரல்ல என்றாள்.
உடனே என் அம்மா என்ன பண்ணினாலும் உடனே பண்ணுங்க நேரமில்லை என்றாள்.
முடிவு பண்ணத்துக்கு அப்புறம் என்ன செயறது.வாயை திறந்து வெண்டுதல்ன்னு சொல்லுறீங்க. பெருமாள் கேக்குறான். நடக்கட்டும் என்று அப்ப்பா சொல்லிவிட்டு குழந்தையை
கூட்டிகிட்டு வாங்க நான் முன்னாடி பொய் பார்பர் கிட்ட சொல்றேன். என்று சொல்லி விட்டு போனார். 
நானும் பெரியவளும குளிச்சுட்டு ரெடியாகுறோம் நீங்க முடி காணிக்கையை முடிச்சிட்டு வந்துடுங்க என்றாள்.
என் மனைவி சிறிய பெண்ணுக்கு ரெட்டை ஜடை போட்டு பூ வைத்தாள். பெரியவள் ஹய்யா ஹய்யா மொட்டை மொட்டை என்று சொல்லி கிண்டல் செய்ய அவள் அழாத குறையாக முகத்தை வைத்துக்கொண்டாள். என் மனைவியும் அம்மாவும் அவளை கண்டித்து சிரியவளை சமாளித்தார். மூவரும் ஒரு போட்டோ எடுத்தபின்னர் நாங்கள் கீழே இறங்கினோம்.
கோரோனா காலத்திலும் கட்டுகடங்கா கூட்டம் எங்கிருந்துதான் வருமோ. 
அப்பா ஒரு பார்பரை காட்டி அவரிடம் மூவரும் முடி காணிக்கை கொடுக்கலாம் என்று சொல்லி எங்களின் கையில் டோக்கனை கொடுத்தார்.நாங்கள் குழந்தையை  வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தோம். நாங்கள் வரும் முன்னர் 4 அல்லது5 பேர் வந்துகொண்டிருந்தனர். வழக்கம் போல பஸ்ஸில் சீட்டு போட்டு அடுத்தவரை உட்கார வைக்கும் பண்பாளர்களாய் இருந்தனர். ஒருத்தர் சீட்டு போட்டு மூன்று பேர் வந்தனர். ஆனால் பார்பர் அவர்களை விரட்டி விட்டார். சிரிப்பை பகிர்ந்து நன்றி சொன்னோம் எங்கள் முன்னால் ஒரு வயதான தெலுங்கு தம்பதி ஏற்கனவே உட்கார்ந்திருந்தனர். முதலில் அந்த வயதான கணவர் 
மொட்டையடித்துக்க கொண்டிருந்தார். சில நிமிடங்களில் அவரது மொட்டையும் முடிந்தது. அடுத்து அந்த வயதான பெண்மணி மொட்டை போட உட்கர்ந்தார். ஏறக்குறைய மொத்த மாக அவருடைய முடி நரைத்திருந்தாலும் அவரது முடி அடர்த்தியாக இருந்தது. 

ஏற்கனவே அவர் தன் தலை முடியை நனைத்துவிட்டு இருந்தார் ஆகவே அவரை உட்கார வைத்து இரண்டு பக்கமும் தலை முடியை பிரித்து விட்டு ரப்பர் பாண்டு போட்டு ஒரு பெண் கட்டிவிட்டாள். பார்பர் கத்தியில் புதிய பிளேடு போட்டு சரக் சரக் என்று மழிக்க ஆரம்பித்தார். அந்த பெண்மணியின் கூந்தல் மழித்து பின் தலை தெரிந்தது. விரைவாக அவரது பின் பகுதியை மழித்து இடதுபக்கம் திருப்பி அவர் கூந்தலை மழித்தார். பின்னர் முன் தலையை வழித்து அந்த கற்றை தனியாக விழுந்தது. பின்னர் அவரின் வலது பக்கமாக திருப்பி மழித்து முடியை எடுத்து அங்கு வேலைசெய்யும் பெண்ணிடம் கொடுத்து அந்த வயதான  பெண்மணியிடம் முடிந்தது என்று எழுந்து போக சொன்னார்.

அடுத்தது எங்கள் முறை ஆகவே நாங்கள் சீக்கிரம் முடித்துவிடலாம் என்று எண்ணினோம். 
முதலில் என் அப்பா குழந்தைக்கு மொட்டையை முடித்தபின் பிறகு என் மனைவியும் பூ முடி  முடிகொடுத்துவிட்டு பிறகு என்னை முடி இறக்கிவிட்டு வருமாறு சொன்னார்.
நாங்களும் ஒத்துக்கொண்டோம்.
முதலில் என் மனைவியை உட்கார வைத்து அவள் கூந்தலில் தண்ணீரை தடவினார். பின்னர் அவளை திரும்பி உட்கார செய்து அவளது சடையில் எவ்வளவு வெட்ட வேண்டும் என்று கேட்டார். என் மனைவிக்கு
நடு முதுகு வரை வெட்ட சொன்னேன்.
 என்னை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு இடுப்புக்கு கீழ் அளவு சொல்லி வெட்ட சொன்னாள். இரண்டு நிமிடத்தில் அவள் பூமுடி கொடுத்துவிட்டு குழந்தையை என் மடியில் உட்காரவைத்து மொட்டை அடிக்க ஆரம்பித்தார். என் மகள் அழுது புலம்புவாள் என்று நினைத்தேன் ஆனால் நாங்கள் எதிர்பாராத விதமாக அமைதியாக இருந்தாள். ஏற்கனவே ஜடை போட்டிருந்ததால்
 பார்பர் அவளுடைய தலையில் தண்ணீர் விட்டு நன்றாக நனைத்தார். குழந்தை என்பதால் பொறுமையாக மொட்டையடித்தார். அவளின் முன்தலை நெற்றியில் இருந்து ஆரம்பித்து பின்னால் வரை சிறைத்தார் பின்னர் இடது பக்கமும் வலது பக்கமும் விரைவாக முடித்தார் பின்னர் இன்னொரு முறை கத்திபடாமல் நன்றாக மழித்துவிட்டார். தோள்வரை சுருளாக கூந்தல் ஜடை போய் மொழுமொழு மொட்டையாக என் மகள் காட்சியளித்தாள்.
முடிஞ்சது குழந்தையை கூட்டிட்டு போங்க என்றார். 
என் மனைவியும் என் அப்பாவும் என்னை சீக்கிரம் மொட்டை அடித்துக்கொண்டு அறைக்கு வரும்படி சொல்லிவிட்டு குளிக்க சென்றுவிட்டனர். அப்போது பார்பர் நான் டீ குடிக்க வேண்டும். நீங்க ஒரு 5 நிமிஷம் இருங்க அதுக்குள்ள வந்துடுறேன் என்றார்.  கொஞ்சம் உங்க தலையை நல்லா தண்ணி ஊதிக்கிட்டு ஈரம் பண்ணிக்கிட்டு வாங்க என்றார். சரி அவரும் மனிதர் தானே என்று நினைத்தபடி அங்கிருந்த குழாய்க்கு சென்றேன். அப்போது தான் அந்த பெண் வந்தாள்.
அவளுக்கு ஒரு 25 வயது இருக்கலாம். நல்ல நிறமாக இருந்தாள், 5 அடி 6 அங்குலம் இருப்பாள் என்று நினைக்கிறேன். பார்க்க வட நாட்டு பெண்ணை போல இருந்தாள்.உடல் வாகுடன் இருந்தாள். எடுப்பான மூக்கு அதில் ஒரு மூக்குத்தி,கழுத்து காது கை நிறைய நகைகளுடன் ஒரு சிவப்பு நிற சுடிதார் உடுத்தியிருந்தாள். 
தன்னுடைய கையில் குழந்தை போல ஒரு பையை வைத்திருந்தாள். பார்த்தால் திருமணம் ஆனவள் போல தெரிந்தது. தனியாக வந்திருக்க வேண்டும் போல தெரிந்தது. 
கொஞ்சம் தயங்கியபடியே நின்றிருந்தாள். நான் தண்ணீர் குழாய்க்கு அருகில் நின்ற இடத்தில் அவளும் நின்றாள். சட்டென்று அண்ணா அண்ணா என்றாள். நான் யாரையோ கூப்பிடுகிறாள் என்று நினைத்து கொண்டு நின்றிருந்தேன்.
அவள் என்னருகே வந்து அண்ணா என்று மறுபடியும் கூப்பிட்டாள். என்னையா கூப்பிடீங்க என்றேன்.
நீங்க தமிழா என்றாள். ஆமாமாம் சொல்லுங்க என்றேன். அண்ணா என்னோட பேக் கொஞ்சம் வெச்சிக்கிறீங்களா என்றாள். எதுக்கு என்றேன் இல்ல நான் மோட்ட போட போறேன் தலையை நனைக்கணும் என்றாள்.
அபோதுதான் அவள் தலையை பார்த்தேன். ஐயோ இவளுக்கு மனசாட்சியே இல்லையா தன்னுடைய தொடை வரை நீண்டு இருந்தது அவளுடைய ஜடை. கருநாகம் போல இருந்த அவள் கூந்தல் பின்னலில் இருந்து என் பார்வையை மிகுந்த சிரமப்பட்டு எடுத்து அவளை பார்த்தேன்.கூட யாரும் வரலியா ம்மா என்றேன். இல்லைங்க என் வீட்டுக்காரர் கீழ இருக்காரு. வர மதியம் ஆகிடும் டிக்கெட்டில் பிரச்சனைன்னு நிறுத்தி வெச்சிட்டங்க என்று சோகமாக சொன்னாள். சரி நீயும் அங்கேயே இருக்கலாம்ல என்றேன். இல்லேன்னா எங்களுக்கு ஒன்னாதான் தரிசனம் கிடைச்சது. ஆனா ஆதார் கார்டு இல்லேன்னு நிறுத்தி வெச்சிருக்கான். என்ன பண்ணுறதுன்னு யோசிச்சோம். அவரு ஆதார் கார்ட் டூப்ளிகேட் எடுத்து வரேன் அதுக்குள்ள என்னைய வேண்டுதலை முடிச்சிட்டு தரிசன துக்கு ரெடியாகிட்டு வான்னு அனுப்பிட்டாரு எனக்கு மொட்டையடிக்க வேண்டுதல் இருக்கு அதுனால இப்போ விட்டாபிறகு நேரமில்லை அதான் வந்துட்டேன்.
ஹிந்தி காரங்க மாதிரி இருக்கீங்க தமிழ் நல்ல வருது என்றேன் ஆமாம் ன்னா பிறந்தது வளர்ந்தத எல்லாம் சென்னை தான். நீங்களும் சென்னையா என்றாள் ஆமாம் என்றேன்.
அவள் கதையை கேட்ட பின் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 5 நிமிடத்தில் அறிமுகம் ஆகி  நிறைய தகவலும் பரிமாறிக்கொண்டோம்.என் குடும்பத்தை பற்றி கேட்டாள். 
ஒரு சின்ன உதவி இந்த bag மட்டும் வெச்சிக்கிட்டு இருங்க நான் என்னோட முடியை நல்ல நனைச்சிக்கிட்டு வந்துடுறேன் என்றாள். சரி சரி போங்க என்று நின்றேன். 
அவள் தன் கூந்தலை ஜடை அவிழ்த்து மொத்தமாக விரித்து விட்டாள். அந்த நேரத்தில் அனைத்து கண்களும் அவள் ஜடையை ஆச்சரியத்துடன் நோக்கியது. 
தொடை வரை நீண்ட அலை போன்ற கூந்தலை தியாகம் செய்ய தைரியம் வேண்டும். அவளின் முடியை அலச கொஞ்சம் சிரமப்பட்டாள்.
எங்கிருந்து தைரியம் வந்ததென்று தெரியவில்லை நான்
 நான் வரவா என்று சற்று சத்தமாக கேட்டேன். அவளும் வாங்கண்ணா என்று சொல்லிவிட்டாள். எனக்கு சந்தோஷம் அவளுடைய முடியை சற்றும் தயங்காமல் ஒரு குழாயை திறந்து விட்டு அவள் தலையை குனிய வைத்து அலச உதவினேன். அவள் கூந்தல் தொப்பலாக நனைந்தது. போதும் என்று சொல்லிவிட்டு அவள் நிமிர்ந்தாள்.
உன் தலை நல்லா நனைஞ்சிருச்சு என்றேன். தேங்க்ஸ் ணா நீங்க என்றாள். நான் அவளுடைய பேக்கை கொடுத்துவிட்டு என்னுடைய தலையையம் நன்றாக நனைத்துக்கொண்டேன். அவ்வளவு தண்ணீர் என் முடிக்கு அவசியம் இல்லை இருந்தாலும் நன்றாக நனைத்துக்கொண்டேன்
எங்கள் இருவருடைய மேலாடையும் நன்றாக நனைந்துவிட்டது. அவள் சொட்ட சொட்ட நைந்து விரித்த கூந்தலுடன் என்னுடன் பார்பருக்காக காத்திருந்தோம். அப்போது அங்கு வந்த வேலைசெய்யும் பெண்மணி  அவளிடம் வந்து ஏமி அம்மாயீ குண்டா என்றாள். அவள் விழிக்க மொட்டையா ன்னு கேக்குறாங்க. ஆமா என்றாள். அவளை குனிய சொல்லி அவள் கூந்தலை இரண்டு கொண்டையாக கட்டிவிட்டாள். நான் இப்போது என்னுடைய பார்ப்ரை தேடிக்கொண்டு இருந்தேன். அவனோ கூட்டம் வந்துவிட்டதால் இடம் மாறி உட்கார்ந்து கொண்டான். ஒரு குழந்தை க்கு முடி எடுத்து கொண்டு இருந்ததால் கொஞ்சம் காத்திருக்க சொன்னான். 
அது வரை நான் அந்த பெண்ணுடன் நின்றிருந்தேன். நான் அவனுடன் பேசியதை பார்த்துவிட்டு
நீங்க பார்ப்ரை பார்த்து வெச்டீங்களா? என்றாள். ஆமாம் என் பொண்ணுக்கு மொட்டை போட்டாச்சு என் பொண்டாட்டி பூமுடி கொடுத்தால ரெண்டு பேரும் குளிக்க போய்ட்டாங்க நான் தான் பாக்கி என்றேன் அண்ணா நெக்ஸ்டு நீங்க போறீங்களா என்றாள். இல்ல நீ போம்மா அவங்க நாலு பேர் இருக்காங்க குளிக்க நேரமாகும் நீ போ first என்றேன். ரொம்ப தாங்க்ஸ் னா என்று சொன்னாள். அவள் தன் மேல் இரக்கப்பட்டு அனுமதித்தேன் என்று நினைத்தாள். நான் முதன் முறையாக ஒருபபெண்ணுக்கு மொட்டையை அருகில் அவள் சம்மதத்துடன் பார்க்கப்போகிறேன் என்ற சந்தோஷத்தில் உள்ளேன் என்று அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகவே சற்று உரிமையுடம் அவள் பையை வங்கிக்கொண்டேன் அவளை உட்காருமாறு பார்பர் சொன்னான். நான் உதவி செய்ய உட்கார செய்து அவள் கூந்தலை முன்னாள் போட்டேன். அந்த பார்பர் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு அவளின் தலையை குனிய வைத்தான். நான் ஆர்வத்தில் இருந்தேன்.
சட்டென்று முன்னாலே இருந்து வழிங்க என்றேன். என்னை சற்று குறு குருவென நோக்கியபின் அவளை நிமிர சொல்லி நான் சொன்னதுபோல நெற்றியில் இருந்து வழிக்க ஆரம்பித்தான். எனக்கு உற்சாகமாக ஆனது அவள் மொட்டையை நான் அருகில் இருந்து பார்க்க முடிந்தது. 
தண்ணீரினாலும் குளிரால் நடுங்கியபடியும் அவள் இருந்தாள். அவளுடைய மேலாடை முழுவதும் நனைந்ததால் பார்பர் அவள் மேனியை பார்க்க முடிந்தது. ஆனால் அவன் பார்த்து பார்க்காதது போல கடமையை செய்ய ஆரம்பித்தான். அடுத்த இரண்டு நிமிடத்தில் அவள் முன் பகுதி முழுவதும் நன்றாக சிறைக்கபட்டு கூந்தல் கற்றையாக விழ தொடங்கியது. அவள் கூந்தல் அருவிப்போல விழுந்தது. அவன் விரைவாக அவள் பின் மண்டைவரை சிறைத்துவிட்டான். அவளை அந்த கோலத்தில் பார்க்க நன்றாக இருந்தது. பின் வலது பக்கம் திருப்பி ஜடையை மொத்தமாக சிரைத்தான் அவள் ஜடை தொப்பென்று அவள் மடிமீது விழுந்தது. அவள் இடதுபக்கமும் அவ்வாறே கடகடவென மழித்துவிட்டார் இரண்டு ஜடையும் மொத்தமாக அவள் மடியில் விழுந்தது. சார் இதை எடுத்து அந்த அம்மாகிட்ட குடுங்க என்றான்.  இரண்டு ஜடையையும்  எடுத்தேன் அவ்வளவு பெரிய பட்டுபோன்ற ஜடை நான் நன்றாக தடவிய படியே அந்த வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்தேன். அப்படி ஒரு மிருதுவான கூந்தலை பார்த்ததே இல்லை.
அதனை பின்னால் இருந்த பெண் என்னிடமிருந்து வாங்கிக்கொண்டாள். நான் முடிஞ்சதா என்றேன். சார் தொட்டு பாருங்க என்றான். அந்த பெண் சட்டென அண்ணா நல்ல பார்த்து சொல்லுங்க சரியா இல்லேன்னா  என் வீட்டுக்காரர் அப்புறம் என்னை திட்டுவாறு என்றாள்.
நான் உடனே அவள் தலையில் கை வைத்து தடவினேன்.
நான் இப்படியெல்லாம் நடக்குமென்று நினைக்கவே இல்லை நடப்பது கற்பனை போல இருந்தாலும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று உண்மையுமான அக்கறையுடன் அவளுடைய தலையை நன்றாக தடவிவிட்டு தலையெல்லாம் நல்லா இருக்கு ஆனா என்றேன்
என்ன என்றாள். உன் முகத்தில் மீசை மாதிரி முடி இருக்கு பிரச்சனை இல்லையென்ன அதை எடுத்துட்டு அப்போ முகம் பார்க்க நல்லா இருக்கும் என்றேன். அவள் சற்று தயங்கினாள் இங்க ஒரே கூட்டமா இருக்கே என்றாள். அப்போது அவ்வளவு ஒன்றும் கூட்டம் இல்லை ஒரு ரவுண்டு போய்விட்டது. 
நானும் வற்புறுதவில்லை ஆனால் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னான் பார்பர்.
சரின்னா சீக்கிரமா முடிங்க என்றாள்.
பார்பர் இப்போர்த்து அவள் தலையில் தண்ணீர் நனைத்து முகத்தில் வழியுமாறு விட்டான்.
அப்படியே அவள் தலைமேல் மழிப்பதுபோல மழித்துக்கொண்டே சரசரவென்று வந்து கிரிதா பகுதியில் கத்தி போடுவதுபோல மழித்துக்கொண்டே அவள் கன்னங்களில் சவரம் செய்தான். அப்படி செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சற்றும் தாமதிக்காமல் மூக்கின் கீழே உள்ள மெல் உதடுகளை அழகாக சிறைத்துவிட்டான். 2 நிமிடங்களில் யாரும் வித்தியாசமாக பார்க்காதவாறு அவளுக்கு முகத்தை மழித்துவிட்டான். 
முடிந்தது  என்று சொல்லி எழுந்திருக்க சொன்னார். நான் அவளை பார்த்தேன் நல்ல சூப்பர் மொட்டைம்மா முகத்தை கூட சுத்தம் பண்ணிட்டான் உன் வீட்டுக்காரர் திருப்தி படுவாறு என்றேன்.
அண்ணா ரொம்ப தேங்க்ஸ் னா உங்களுக்கு தான் லேட் ஆகிக்கிட்டேன் என்றாள். பரவாயில்லைம்மா இதெல்லாம் ஒரு உதவிதான என்றேன்.

நான் பார்பரிடம் லேடிஸ் குளிக்க இடமிருக்கா ? என்று கேட்டேன். அவன் அந்த பக்கமா போன லேடீஸ் பாத்ரூம் இருக்கு அங்கேயே துணியும் மாத்திக்கலாம் என்று சொல்லி ஒருப்பெண்ணை கூப்பிட்டு ஏதோ சொன்னான். அவள் தலையாட்டிவிட்டு அந்த பெண்ணை தன்னுடவ்ன் வர சொன்னாள். அவளுக்கு மிகவும் சந்தோஷம் எங்களுக்கு  நன்றி சொன்னாள்.
உங்களுக்கு அப்போ எத்தனை மணிக்கு தரிசனம் என்றாள். எனக்கு மதியம் 12 30 ன்னு போட்டிருக்கு என்றேன். அடநானும் அப்போதான் போட்டிருக்காங்க. அப்போ சரி என் வீட்டுக்காரர் வந்த உடனே நானும் தரிசனத்துக்கு வந்துடுவேன். முடிஞ்சா அங்க பார்க்கலாம் என்றாள். ஒரு சின்ன ஹெல்ப் இந்த காசை பார்பர் கிட்ட கொடுத்திடுங்க இது காணிக்கை காசுதான் என்றால். சரிம்மா  போய்ட்டு வா என்றேன். தன் கணவர் என்ன செயகிறாரோ என்று2 நினைத்து2 வருந்தினாள். திடீரென அவள் போன் இசைத்து. அவருதான் கூப்பிடுறாரு என்று சொல்லிவிட்டு  அழைத்ததாக சொல்லி. பேசினாள். அண்ணா நல்ல நியூஸ்!அவரு ஆதார் கார்ட் காபி எடுத்துட்டாராம். அலிபிரியில விட்டாங்களாம். பச்சில வந்துகிட்டே இருக்காரு என்றாள். நல்லதும்மா நீ கிளம்பு குளிச்சிட்டு ஒரு இடத்தை சொல்லி உன் வீட்டுக்காரரை வர சொல்லு. சரின்னா என்று சொல்லி விட்டு கிளம்பினாள். நான் சற்று நிம்மதியடைந்தேன்.
பார்பர் இப்போது என்னை உட்கார சொன்னார்
மறுபடிதான் என் தலையில் தண்ணீர் விட்டு பிளேடு மாற்றி என் தலையை மொட்டையடிக்க ஆரம்பித்தார்.
உங்க சொந்தகாரங்களா என்றார். இல்லை உதவி கேட்டாங்க பண்ணேன் அவ்ளோதான் என்றேன்.நீங்க 
நல்லா மொட்டையை என்ஜாய் பண்ணினீங்களா என்றார்.
பின்ன நீங்களும் தானே 
நல்லா என்ஜாய் பண்ணி மொட்டையடிச்சிங்க என்றேன்.
ஆமாம் இப்படி தலைமுடி பேக் வரைக்கும் இருக்கிற பொண்ணை ரசிக்காமல் இருக்க முடியுமா என்றார். அவர் ஓரு பீடிஷ் என்று நினைத்தேன். இப்போவச்சும்கூட்டம் இருக்கு முன்னாடி இதை விட நிறைய மொட்டை போட ஆள் கிடைக்கும் கோரோனா வுகப்புறம் ரொம்ப டவுன் என்றார்.
எனக்கு மொட்டையடிக்க ஆரம்பித்தார்.
என்னுடைய தலையில் முடி குறைந்து கொண்டே வருகிறது என்றார்.
என்ன செய்யங்க வேலை டென்சன் என்றேன்
பெருமாள் மேல் பாரத்தை போட்டு விட்டு உடம்பை பார்த்துகொங்க என்றார். சரிங்க என்றேன்
என் முன் தலை மோட்டையான பின் என்னை வலது பக்கம் திருப்ப நன்றாக இரண்டு முறை சிறைத்தார். இடதுபக்கமும் நன்றாக அப்படியே மழித்துவிட்டார்.
பின்னர் என்னை நன்றாக குனியும்படி உட்கார சொல்லி பின் தலையை இரண்டு முறை பொறுமையாக சிறைத்தார். பின்னர் என் முகத்தில் தண்ணீர் தடவி நன்றாக மசாஜ் செய்து முகத்தை சவரம் செய்து மீசை தாடியை நீக்கினார். பின்னர் மீண்டும் ஒரு முறை தலையை நன்றாக ரிவர்ஸ் போட்டு சிறைத்தார். அதற்க்கு அடுத்த பேட்ச் கூட்டம் வரவே தலையை தடவி விட்டு முடிஞ்சது சார் என்றார். நான் எழுந்திரிக்கும் முன்னர் என் குடும்பத்திற்கும், அந்த பெண் கொடுத்த பணத்துடன் சேர்த்து நாலு முடி காணிக்கை என்று சொல்லிவிட்டு அவர் பலகையின் அடியில் காணிக்கை சொருகினேன்.
தேங்க்ஸ் சார் சிசிடிவி ல தெரிஞ்சிடும் மெதுவா வெச்சிட்டு போங்க என்று சொல்லி நைசாக வைத்தவுடன் எடுத்துக்கொண்டார்.
நான் அவசரம் அவசரமாக என் அறைக்கு சென்றேன். நல்ல வேலையாக ஒரு 20  நிமிடம்தான் இத்தனை சம்பவங்களும் நடந்தன. அனைவரும் குளித்து விட்டு தயாராக இருந்தனர். நான் உள்ளே சென்றதும் என் பெரிய மகள் என்னை பார்த்து அழுதாள். என் மொட்டையடித்தாய்?  மீசை எடுத்தாய்? என்று அழுது புலம்பினாள் நன்றாகவே இல்லை என்றாள். நான் அதை சட்டை செய்யாமல் உள்ளே சென்று பாத்ரூமில் குளித்து விட்டேன். 
வெளியே வந்து என் மொட்டையை கண்ணாடியில் பார்த்தேன். வித்தியாசமாக இருந்தது. நாங்கள் தயாராகி விட அனைவரும் அறையில் வங்கி வந்த டிபனை சாப்பிட்டோம். அறையை காலி செய்துவிட்டு தரிசனத்திற்கு போகலாம் ஏற்கனவே 
நாங்கள் தங்கும் நேரம் முடிந்ததால் அறையை காலி செய்துவிட்டு லக்கேஜை வண்டியில் ஏற்றி பின்னர் தரிசனத்திற்கு சென்றோம்.
பெரியவள் சோகமாக வே இருந்தாள். முடித்தானே வளர்ந்ததும். நான் பாப்பாவை சமாதானம் செய்ய வேண்டி தான் மொட்டை போட்டேன் என்று பெரியவளளை மாதானம் செய்துகொண்டே வந்தேன். கொஞ்ச நேரம் கழித்து அவள் சமாதானம் அடைந்தாள். அனைவரும் டிக்கெட்டை கொடுத்து விட்டு காத்திருந்தோம்.
 நாங்கள் காத்துக்கொண்டிருக்கும்போது
என் மனைவியிடம் நான் மொட்டையடித்தது பிடிக்கலியா என்றேன். சே சே இல்லைங்க வேண்டுதலை குறை சொல்லலை. 
நீ ஏன் பூ முடி கொடுத்த திடீர்னு என்கிட்ட கூட சொல்லாம என்றேன். உங்களுக்கு பிடிக்கலியா 
நானும் சே சே இல்லை ஆனா எதுக்கு
நீங்க எதுக்காக அடிச்சிங்களோ அதுக்காக தான் என்று சொல்லி விட்டு சிரித்தாள்.

ஆனால் நீங்க என் லேட்டு ?என்றாள். அந்த பார்பர் எங்கயோ போய்ட்டான். அவனுக்காக வெய்ட் பண்ணி அப்பரம் அடிச்சேன் அதான் லேட் அப்பா காசு கொடுத்தேன்னு சொன்னாரு வேர ஆளுகிட்ட போக கூடாதில்ல என்றேன்.
பேசிக்கொண்டிருக்கும் போதே
அவள் வருவாளா என்று அப்போதைக்கு பரர்த்துக்கொண்டே இருந்தேன். எங்காவது தென்படுவாளா என்று எண்ணினேன்.அவளை காணவில்லை.
அப்புறம் தேடுவதை மறந்துவிட்டு தரிசனத்திற்கு உள்ளே சென்றேன்.
ஏன் பெருமாளை அவ்வளவு கஷ்ட்டபட்டு பார்க்க வேண்டும் என்று அங்கு நிற்கும்போதுதான் விடை கிடைக்கும். அந்த தெய்வீக அனுபவத்தை நாமாக உணறதான் முடியும். எழுத முடியாது.
திவ்ய தரிசனம் பெற்றோம். வெளியில் வணர்த்து உண்டியலில் காணிக்கை செலுத்தினோம். அந்த குளிர் காலத்தில்
பெருமாளை தரிசனம் செய்து வெளியே வந்தோம் அனைவருக்கும் பெரும் நிம்மதி. பிறகு நானும். அப்பாவும் லட்டு கவுண்டரில் பெருமாள் தரிசனம் போலவே காத்திருந்து லட்டினை பெற்றோம். முடித்து விட்டு வெளி பிரகாரம் வந்து குளக்கரை வந்தோம். அப்பாவும் அம்மாவும் சற்று உட்கார்ந்துவிட்டு போவோம் என்றனர்.நானும் மனைவி குழந்தைகளும் படிக்கட்டுகள் ஏறி
ஹனுமான் கோயில்லின் அருகில் நிற்கும்.போது குழந்தைகள் பொம்மை வேண்டுமென்று கேட்டனர். அப்போது நானும் குழந்தைக்கு ஸ்கார்ப் ,தொப்பி வாங்கலாம் என்றேன். உங்களுக்கு தொப்பி? என்றாள் மனைவி 
அய்யே எனக்கு மொட்டையே நல்லா இருக்கு என்றேன்
இருக்கும் இருக்கும் என்றாள்.
சரி வாங்க போவோம் என்று சொல்லி கடைக்கு சென்று பார்த்தோம் குழந்தைகள் பொம்மைகள் வேண்டும் தொப்பி வேண்டாம் என்றனர்.
வாங்கிகொண்டு வரும்போது அவள் ஒரு கடையில் அவள் கணவனுடன் இருந்தாள். தன் மொட்டை தலைக்கு கர்சீஃப் வாங்கிக்கொண்டிருந்தாள். நான் மனைவியுடன் அவளை பார்த்தாள் வம்பென்று தவிர்க்க பார்த்தேன். அவள் என்னை சரியாக பார்த்துவிட்டு கையாட்டினாள் அவள் கணவனிடம் என்னை பற்றி சொன்னாள் போல தெரிந்தது. அவர்கள் 3நினை பார்த்து சிரித்தனர். எங்கள் அருகே நடந்து வந்தனர்.
என் மனைவி இதையெல்லாம் புரியாமல் பர்த்துக்கொண்டிருந்தாள்.
அண்ணா தரிசனம் முடிஞ்சதா? உங்களை வெயிட்டிங் ஹாலில் தேடினோம். நான் பார்க்கும் போது நீங்க போய்டீங்க. இவருதான் என் வீட்டுக்காரர் என்றாள்.
அவன் எனக்கு வணக்கம் சொல்லி ரொம்ப தாங்க்ஸ் ஜி நாங்க இன்னிக்கி தரிசனமும் பண்ணிட்டு பங்களூரு போகணும். நான் அலிபிரில பார்க்கும்போது என்னோட ஆதார் மிஸ் பண்டேன். இவ வேற சட்டனா மொட்டை போடணும் ன்னு சொன்னா எங்களுக்கு வேரா வழி இல்லை சோ நான் தைரியமா இவளை அனுப்பிச்சிட்டேன். அப்புறம் அங்க ஒரு சேராக்ஸ் கடையில என் ஆதாரை டூப்ளிகேட் காப்பி எடுத்து அலிபுரியில காட்டினேன் அப்புறம் தான் என்னை மேலே விட்டான். நீங்க இவளுக்கு மொட்டை போட ஹெல்ப் பண்ணினீங்க ன்னு சொன்ன அவள் ஒரு பாயிண்ட் ல நிக்க சொன்னீங்களாம். கரெக்ட்டா நான் கண்டுபிடிச்சிட்டோம். தரிசனமும் முடிஞ்சது. உங்க ஹெலப்புக்கு ரொம்ப தேங்க்ஸ் என்று பெரிய சொற்பொழிவை கொடுத்தான்.
கொரோனா வந்து இவ்வளவு டார்ச்சர். இது எப்போ ஒழியுமோ என்றால் அவள்.
என் மனைவி எதுவும் புரியாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு பெயருக்காக சிரித்துக்கொண்டே இருந்தாள்.
நான் பார்பர் சொன்னதை நினைத்தேன்
பெருமாள் சோதனை பண்ணாலும் நல்லபடியா ஹெல்ப் பண்ணிட்டாரில்ல அவர் மேல பாரத்தை போட்டா நல்லதுதான் நடக்கும் என்றேன்.
உண்மை ஜி எனக்கு கொஞ்சம் ஹெல்த் பிரச்சினை அது சரியா போகணும்னு இவை மொட்டையடிக்கிறதா வேண்டி இருக்கா. இன்னிக்கி உங்க ஹெல்ப் நால முடிஞ்சது என்றான். 
இனிமே எல்லாம் நல்ல படியாக நடக்கும் போய்ட்டு வாங்க என்று சொன்னேன்.
என் குழந்தைகளை கொஞ்சி விட்டு இருவருக்கும் ஒரு சாக்லேட் கொடுத்து விட்டுஅவர்கள் கிளம்பினர்.
பின் என் மனைவி என்னை முறைத்துவிட்டு யோவ் மனுஷா யாரு இவங்க இதெல்லாம் என்றாள். 
அதான் அவள் புருஷன் கதை சொன்னான் ல. 
ஹ்ம்ம் நீங்க லேட் பண்ணும்போதே நினைச்சேன். ஏதோ வம்புன்னு அப்பொவே நினைச்சேன். மாமா கீழயே வந்திருப்பாரு. நான்தான் வேண்டாம் நீங்களே முடிச்சிட்டு  வந்துடுவீங்க ன்னு சொல்லி நிறுத்தினேன். இதுதான் லேட்டுக்கு காரணாமா.
வந்த இடத்திலே சில்மிஷமா என்றாள்
நான் சாரிம்மா பாவம் ஒருத்தர் ஹெல்ப் பண்ணோம். நல்லது தானே  பண்றோம் ன்னுதான் நினைச்சேன். வேரா ஒன்னும் இல்ல என்றேன். அப்போ எனக்கு பெரிய டேரி மில்க் வேணும் என்றாள். சரிம்மா வங்கிடுவோம் என்று.சொல்லி இளித்தேன். 
சரி சரி போகட்டும் வம்பு வராம இருந்தா சரி..கிளம்புவோம் என்றாள். 
தப்பிச்சென் சாமி என்று நினைத்தேன்.
நாங்கள் அங்கிருந்து கிளம்பி கீழே வந்தடைந்தோம் பீமா ஓட்டலில் நன்றாக உண்டோம். பிறகு கீழ் திருப்பதி சென்று அலர்மேல் மங்கை தாயாரை தரிசனமும் செய்து அன்று இரவு வீட்டிற்கு வந்தடைந்தோம்.
எனக்கு அன்று பல அனுபவங்கள் கிடைத்தது.  முக்கியமாக என் மனைவி பூமுடி கொடுத்தது, திடீரென ஒரு பெண்ணுக்கு மொட்டையடிக்க நான் உதவியது, நான் மொட்டையடித்துக்கொண்டது.
இந்த அனுபவம் ஏலோருக்கும் எப்போதும் கிடைப்பதில்லை.
நம்மைபோன்ற மொட்டை விரும்பிகளுக்கு எப்போதாவது ஒரு இது போன்ற அனுபவம் கிடைக்கும் அப்படி ஒன்றை பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன்.இன்றுடன் இந்த சம்பவம் நடந்து ஓது வருடம் முடிந்தது. எப்போதும் இந்த இனிய அனுபவம் எனக்குள் இருக்கும்.
நன்றி நன்றி நன்றி






4 comments:

  1. Bro semaya eruku ungaloda store 1hss store kuda ungaluthu padiche eruken super ah erukum vanamudirani store

    ReplyDelete

கல்யாணி மொட்டை பகுதி 4

மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு சரிக்கா அப...